Tuesday, April 26, 2011


யார் நாம் ! என்ற கேள்வியை கேட்காத மனிதர் இல்லை,கேட்டாலும் விடையும் இல்லைஆனால் நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் பிறந்துவளர்ந்துஆளாகி தன்னை அறிய துறவறம் போகின்றனர்துறவறம் சென்றவர்கள்மண்ணாசை,பெண்ணாசைபொருளாசை மூன்றையும் கொண்டவர்களாக இருந்தாலும்துறவறத்திற்கு பின்பு இவைகளின் நிலையாமையை உணர்ந்து அவைகளை துறக்கின்றனர்.எல்லோர்க்கும் பயன்பட நமக்கு சில கருத்துக்களை சொல்கின்றனர்அப்படிப்பட்டவைகளை நாம் பற்றி பிடித்துக்கொண்டு அவர்களின் வழியில் செல்ல நல்லோர்களின் அருளும்நாயகனின் தயவும் கிடைக்கும்.

பட்டினத்தாரின் பாடல்களில் இதோ ஒரு பாடல்..

பிறந்தன இறக்கும்இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்சிறுத்தன பேருக்கும்;
உணர்ந்தன மறக்கும்மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும்பிரிந்தன புணரும்;
உவப்பன வெறுப்பாம்வெறுப்பன உவப்பாம்

பிறந்தன இறக்கும்இறந்தன பிறக்கும்.
உலகம் என்பது நிலையில்லாததுநாளுக்கு நாள் மாறிக்கொண்டேஇருப்பதுஅதில் வாழும் உயிர்களும் பரிணாமமாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையைஉண்டாக்கிக்கொண்டு வரும்எந்த உயிருக்கும் நித்தியத்துவம்என்பது இல்லைபிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தேஆகவேண்டும்இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்பமுடியாதுசரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர்முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லைஅப்படிப்பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்பமறுபடியும் ஜனன மெடுக்கும்இதுதான் முதற் பழமொழியின்பொருள்.

தோன்றின மறையும்மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை.காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான்.அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். (இஃதுசூரியனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும்பொருந்தும்

பெருத்தன சிறுக்கும்சிறுத்தன பேருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள்முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்துமுடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும்அந்தஅமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறைபூரணச் சந்திரனாக காட்சியளிகும்நிலவு தேய்வதும் வளர்வதும்இயற்கை நிகழ்வுகள். (இஃது சந்திரனுக்கு மட்டுமல்ல , எல்லாஉலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)

உணர்ந்தன மறக்கும்மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான்.எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது.சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றனஉணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும்அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

புணர்ந்தன பிரியும்பிரிந்தன புணரும்.
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறதுஅந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும்இது ஒரு வட்டச் சுழற்சி.

உவப்பன வெறுப்பாம்வெறுப்பன உவப்பபாம்
விரும்பிப் போனால் விலகிப் போகும்விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது.பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.


மனம் உணருமாஉணர வேண்டும் !

No comments:

Post a Comment